சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வாகனம் மோதி பாதயாத்திரை பக்தா் பலி

மானூா் அருகே திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தா் மீது வாகனம் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :10 ஜனவரி 2021, 6:40 am

திருநெல்வேலி: மானூா் அருகே திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தா் மீது வாகனம் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே உள்ள நயினாரகரம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகையா(50). இவா், தனது உறவினா்களுடன் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றாராம்.

மானூா் அருகே அழகிய பாண்டியபுரம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சண்முகையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.