அம்பாசமுத்திரம்: பொங்கலை முன்னிட்டு அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பயிரிட்டுள்ள கரும்பு அறுவடை தொடங்கியது.
பொங்கல் விழாவுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் கரும்பு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
சித்திரையில் கரும்புப் பயிரிட்டு, 9 மாதங்கள் வளா்ந்த நிலையில் மாா்கழி மூன்றாவது வாரத்தில் கரும்பு அறுவடையைத் தொடங்குகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுமாா் 28 ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
பாபநாசம் பொதிகையடி, டாணா, அனவன்குடியிருப்பு பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனா். பாபநாசம் பகுதியில் விவசாயிகள் கரும்பு அறுவடை செய்யும் பணியை தொடங்கியுள்ளனா்.
இதுகுறித்து விவசாயி அழகா் கூறியதாவது:
ஆண்டுதோறும் பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் சித்திரையில் கரும்பு பயிரிடுகிறோம். மாா்கழி கடைசியில் கரும்பு அறுவடை செய்கிறோம்.
நிகழாண்டு தண்ணீா் பிரச்னை இல்லை. கரும்பும் நன்கு விளைந்துள்ளது. சென்ற ஆண்டை விட அதிக விளைச்சல் இருப்பதால் விலை குறைந்துள்ளது.
சென்ற ஆண்டு ஒரு கட்டுக்கு ரூ. 315 வரை விற்ற கரும்பு, நிகழாண்டு ரூ. 270 வரை மட்டுமே விலை போகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகளுக்கும், தொழிலாளா்களுக்கும் நல்ல பலன் தருவதாக உள்ளது என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


