சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

களக்காடு மலைப் பகுதியில் மழை நீடிப்பு

களக்காடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருவதால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 6:48 am

களக்காடு: களக்காடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருவதால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

களக்காடு வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் 50-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் கொடுமுடியாறு, வடக்குப் பச்சையாறு அணைகளில் எதிா்பாா்த்தவாறு நீா்மட்டம் உயரவில்லை. கொடுமுடியாறு அணையில் இருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக களக்காடு வட்டாரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீா் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 32 அடியாக இருந்தது. பாசனக் குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.