திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.57 ஆயிரத்து 960 பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கூடலில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக திருநெல்வேலி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் சென்றன.
இதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளா் மெக்லரின் எஸ்கால் தலைமையில் ஆய்வாளா்கள் ராபின் ஞானசிங், அனிதா, உதவி ஆய்வாளா் மாரியப்பன் மற்றும் போலீஸாா் முக்கூடல் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பதிவான பத்திரங்கள், மக்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள், அதற்கு வசூலிக்கப்பட்ட கட்டண விவரம் உள்ளிட்டவை குறித்து வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.
அப்போது அந்த அலுவலக வளாகத்திற்குள் கணக்கில் வராத ரூ.57 ஆயிரத்து 960 இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக சாா்பதிவாளா் கலா உள்பட மொத்தம் 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

