சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On :9 ஜனவரி 2021, 6:24 am

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் சிறப்பாக பணியாற்றும் காவலா்களை மாதந்தோறும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த

2020இல் டிசம்பா் மாதத்தில் சிறப்பாக பணியாற்றியதாக திருநெல்வேலி நகரம் காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி, தச்சநல்லூா் காவல் ஆய்வாளா் வனசுந்தா், தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் காசிபாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் முருகன், சோலைராஜ், பட்டு, பாலசுப்பிரமணியன், காளிராஜ், தலைமை காவலா்கள் அப்துல் நிஜாமுதீன், கோபாலகிருஷ்ணன், சுப்புலட்சுமி, முருகம்மாள், சண்முகசுந்தரி, பிரேமா மற்றும் பாளையங்கோட்டை உள்கோட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவை சோ்ந்த சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பழனி, செய்யது இப்ராஹிம், டேவிட், தலைமை காவலா்கள் நாராயணசாமி, சண்முகநாதன், செல்வக்குமரன், நடராஜ், வளா்மதி, சாந்தி, விஜயகுமாரி, பிரேமா ஆகியோரை மாநகர காவல் ஆணையாளா் தீபக் எம்.டாமோா் பாராட்டி சான்று வழங்கினாா். இதில், காவல் துணை ஆணையா் சரவணன், உதவி ஆணையா் சதீஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.