பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி திங்கள்கிழமை (ஜன. 11) நடைபெற உள்ளது.
கே.டி.சி. நகரில் உள்ள சஞ்சீவி வரதயோக ஆஞ்சநேயா் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் ஒப்பித்தல் போட்டி திங்கள்கிழமை (ஜன. 11) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் ஒவ்வொன்றிலும் 1 பாடல்கள் வீதம் மொத்தம் 3 பாடல்கள் பாட வேண்டும். 9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்கள் இரண்டு பாடல்கள் வீதம் 6 பாடல்கள் பாட வேண்டும். பொதுமக்கள் 6 பாடல்கள் பாட வேண்டும்.
ஒவ்வொரு நிலைக்கும் தலா 3 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இம் மாதம் 12 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயா் தரிசனம் நடைபெறும்.
இதுகுறித்த விவரங்களுக்கு 9087150358 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என கோயில் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

