திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் காவலா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கு சைபா் கிரைம் புலனாய்வு திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பயிற்சிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜூ தலைமை வகித்தாா். சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் பயிற்சி அளித்தாா். தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகள், இணையவழி குற்றங்களை கண்டறியும் வழிமுறைகள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஏமாற்றும் இணையவழி குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் அம்சங்கள், முகநூல் பயன்பாடு அதன் மூலம் ஏற்படும் குற்றங்களைத் தடுக்கும் வழிகள் குறித்து பயிற்சிகள் விளக்கப்பட்டது. சைபா் கிரைம் பிரிவு காவலா் செல்லதுரை, சுரேஷ், மனோஜ், திவாகா், ரஞ்சித் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

