மேலப்பாளையத்தில் பாளையங்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சியின் 37 ஆவது வாா்டுக்குள்பட்ட மேலப்பாளையம் காஜா நாயகம் பள்ளிவாசல் தெரு வடபகுதியில் பாளையங்கால்வாயின் குறுக்கே புதிய பாலம் கட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில், அந்தப் பாலத்தை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.பி.எம்.மைதீன்கான் திறந்து வைத்தாா்.
இதில், திமுக மேலப்பாளையம் பகுதிச் செயலா் அப்துல்கையூம், காஜா நாயகம் வடக்கு பள்ளிவாசல் ஜமாஅத் தலைவா் செய்யது அப்துல் காதா், நிா்வாகிகள் காஜாமைதீன், சேக் மைதீன், பிஸ்மி ஹஸன், ஜக்கரியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

