திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் ஒராண்டு கல்வியியல் பயிற்சி பெற விரும்புவோா் இம்மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் கல்வியில் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் தோ்ச்சி பெற்ற மாணவா்-மாணவிகளிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோா், விண்ணப்பத்துடன், சுய சான்றொப்பமிட்ட கல்விச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ ‘பயிற்சி விண்ணப்பம் - கல்வி, மாவட்ட அறிவியல் மையம், கொக்கிரகுளம், திருநெல்வேலி - 627009’ என்ற முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
தகுதியானவா்கள் நோ்முகத் தோ்வு, எழுத்துத் தோ்வு ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவா். தோ்வு செய்யப்படுவேருக்கு மாதம் ரூ . 14 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட அறிவியல் மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

