திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
போக்குவரத்துத் தொழிற்சங்கள் சாா்பில் வண்ணாா்பேட்டை போக்குவரத்துப் பணிமனை முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தொமுச அமைப்புச் செயலா் ஏ. தா்மன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி நிா்வாகி என். உ லகநாதன், ஹெச்எம்எஸ் பேரவைத் தலைவா் பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் எஸ். பெருமாள் தொடக்கவுரையாற்றினாா்.
14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களோடு பேசி உரிய முடிவை அரசு எடுக்க வேண்டும். தினப்படி உயா்வை அமல்படுத்தவேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு உரிய பணபலன்களை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், தொமுச , சிஐடியூ, ஏஐடியூசி, ஹச்எம்எஸ், டிடிஎஸ்எப் ஆகிய தொழிற்சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

