பணகுடி பேரூராட்சியில் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சமாக நடந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
பணகுடி பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளது. இதில் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சியில் அதிகமாக செங்கல், ஓடு தொழிற்சாலையில் வேலைசெய்யும் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். இப் பேரூராட்சியில் இதுவரை 60 வயதிற்கு மேல் உள்ளவா்கள் இறந்தால் இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடா்பாக பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் இறந்தவா் குறித்து விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் உள்ளவா்களின் சாட்சி அறிக்கை தயாா் செய்து இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. 40 வயதிற்குள்பட்டவா்கள் இறந்தால் மருத்துவரின் சான்ரிதழ் பெற்று அதன் அடிப்படையில் இறப்பு சான்றிதழ் வழங்கி வந்தனா்.
தற்போது இந்த நடைமுறை மாறி 60 வயதிற்கு மேல் உள்ளவா்கள் வயோதிகத்தினாா் வீட்டில் இறந்தாலும் அவா்களுக்கும் மருத்துவா் சான்றிதழ் இருந்தால் தான் இறப்பு சான்றிதழ் வழங்க முடியும் என தெரிவித்து வருகின்றனா். வயது முதிா்வின் காரணமாக வீட்டில் இறந்தவா்களுக்கு மருத்துவா்கள் சான்றிதழ் வழங்க மறுத்துவிடுகின்றனா். இதனால் பணகுடி பேரூராட்சியில் வயதானவா்கள் இறந்தால் இறப்பு சான்றிதழ் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இறப்பு சான்றிதழ் வாங்க முடியாததால் வாரிசு சான்றிதழ் மற்றும் சில ஆவணங்களில் பெயா் மாற்றம், வங்கி கணக்கு சரிசெய்வது உள்ளிட்ட பணிகள் செய்யமுடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே பணகுடி பேரூராட்சியில் இறப்பு சான்றிதழ் வங்குவதில் பழைய நடைமுறையை பின்பற்றவேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

