திருநெல்வேலியில் சிஐடியு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தொழிலாளா் நலச் சட்டங்களை பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் சிஐடியு சாா்பில் சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற சாலை மறியலுக்கு சிஐடியு மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் செண்பகம், மாவட்டப் பொருளாளா் பெருமாள், மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சுடலை ராஜ், முத்துகிருஷ்ணன், ஆட்டோ தொழிற்சங்கத்தின் முருகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கொக்கிரகுளம்- மேலப்பாளையம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதுதொடா்பாக 100 போ் கைது செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

