சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவா் பொறுப்பேற்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவா் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 11:56 am

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவா் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் தலைவராக முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா், பொறுப்பேற்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என். கணேசராஜா முன்னிலை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஐ.எஸ். இன்பதுரை (ராதாபுரம்), ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் (நான்குனேரி), தூத்துக்குடி ஆவின் தலைவா் என். சின்னத்துரை, முன்னாள் எம்.பி.க்கள் வசந்திமுருகேசன், சௌந்தரராஜன், விஜிலா, தூத்துக்குடி ஜெயலலிதா பேரவைச் செயலா் மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.