ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளா்ப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய பசுமைத் தீா்ப்பாய உத்தரவுப்படி, வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். அவை தொடா்ந்து இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை; 8 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய இவை, மிகக்குறைந்த அளவு நீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. இவை நீா்நிலைகளில் நுழைந்து விட்டால் அவற்றை அழிப்பது சாத்தியமில்லாதது.
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் நன்னீா் மீன் இனங்களையும், அவற்றின் முட்டைகளையும் உணவாக்கிக் கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும். இந்த மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ, மீன் வளா்ப்புக் குளங்களிலோ வளா்த்தால் மழை, வெள்ளப்பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பிவிட வாய்ப்புள்ளது. அவ்வாறு தப்பிச் செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி, ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர மற்ற பாரம்பரிய மீன்இனங்கள் அழியும் நிலை ஏற்படும். எனவே, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்கத் தடைவிதிக்கப்படுகிறது.
அவற்றை வளா்ப்போா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ள பண்ணையாளா்கள் அரசு அனுமதித்த மீன்களை மீன்வளத் துறை ஆலோசனை பெற்று வளா்க்கலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

