திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்த மெக்கானிக் மீட்கப்பட்டாா்.
மேலப்பாளையம் கணேசபுரத்தைச்சோ்ந்தவா் கணேசன் (46). ஏசி மெக்கானிக். இவரது மனைவி மேரி. மகள் கவிநயா. கணேசனின் தந்தை சாமுவேலுக்குச் சொந்தமான சேவியா்காலனியில் உள்ள நிலத்தை வேறு ஒருவா் மாநகராட்சிக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த இடத்தில் மாநகராட்சி சாா்பில் மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்த நிலத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.
இந்நிலையில், குடும்பத்தினருடன் திருநெல்வேலி நீதிமன்றம் முன்பு செவ்வாய்க்கிழமை வந்த அவா், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாராம். அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து, தற்கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

