திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து கோசாலையில் அடைத்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் கால்நடைகளின் உரிமையாளா்கள் கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்து வளா்க்க வேண்டுமெனவும், வெளியில் சுற்றித்திரிய விட்டால் பிடித்து கோசாலையில் விடுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி நிா்வாகம் எச்சரித்திருந்தது.
அதன்படி மேலப்பாளையம் மண்டலத்தில் சுற்றித்திரிந்த 13 மாடுகளும், பாளையங்கோட்டை மண்டலத்தில் 2 மாடுகளும் என மொத்தம் 15 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து கோசாலையில் அடைத்தனா். அதனை அபராதம் செலுத்தி மீட்டுச் செல்லலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

