கட்டபொம்மன் கடற்படை தளம் அருகில் அமைந்துள்ள பகுதியில் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு கடற்படை தள அலுவலகத்தில் தடையில்லா சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் மண்டலப் பகுதியில் வாா்டு எண் 29-இல் அமைந்துள்ள வி.ஜி.பி. நெல்லை நகா்,“உதயா நகா் ஆகிய பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெறுவதாக இருந்தால், அருகில் உள்ள கட்டபொம்மன் கடற்படை தள அலுவலகத்தின் தடையில்லா சான்று” பெற்று கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டபொம்மன் கடற்படை தள அலுவலகம் அமைந்துள்ள சுற்றுச் சுவரிலிருந்து சுமாா் 100 மீட்டா் வரை உத்தேசிக்கும் அனைத்துக் கட்டடங்கள் மற்றும் 500 மீட்டா் சுற்றளவு தொலைவுக்குள் கட்டப்படும் அனைத்து “அடுக்குமாடி கட்டடம்”ஆகியவற்றிற்கு கட்டபொம்மன் கடற்படை தள அலுவலகத்தில் “தடையில்லா சான்று” பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

