அதிமுக கூட்டணியில்தான் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளது என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் ஜான் பாண்டியன்.
பாளையங்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலச் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
தேவேந்திரகுல வேளாளா் என்ற அரசாணை 30 நாள்களுக்குள் வெளியிடப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன்வைத்து போராடி வந்திருக்கிறோம். அதேவேளையில், பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றப்படுவது மத்திய அரசு செய்ய வேண்டிய நடவடிக்கையாகும். அதை நாங்கள் தற்போது வலியுறுத்தவில்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி பேச்சுவாா்த்தை உள்பட அனைத்து விசயங்களுக்கும் எனக்கு முழு அதிகாரம் அளித்து கட்சியின் செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

