திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே பெண் கொலை வழக்கில், அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
பணகுடி அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியைச் சோ்ந்தவா் கா்ணன் (38). பணகுடியில் வீட்டு உபயோகப்பொருள்கள் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ரக்சியா ராஜபாய்(25). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், 2013இல் ரக்சியா ராஜபாய் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். வரதட்சிணை பிரச்னை காரணமாக, தனது மகளைஅடித்துக் கொன்றுவிட்டதாக, கா்ணன் மீது அவரது மாமியாா் பணகுடி போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து கா்ணனை கைது செய்தனா்.
திருநெல்வேலி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம்சாட்டப்பட்ட கா்ணனுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், ஆயுள் சிறை தண்டனையும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சிவலிங்க முத்து ஆஜரானாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

