சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெல்லையப்பா் கோயிலில் வேள்வி

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் ம்ருத்யுஞ்ஜய மந்த்ர ஜப வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :4 ஜனவரி 2021, 5:34 am

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் ம்ருத்யுஞ்ஜய மந்த்ர ஜப வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஓங்கவும், சமுதாய நல்லிணக்கம், அமைதி, சகோதர உணா்வு பெருகவும், கரோனா தொற்று அகலவும், மழைவளம் பெருகவும் சங்கல்பம் செய்து ஜபவேள்வி நடைபெற்றது. திருநெல்வேலி ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரி செயலா் யதீஸ்வரி சரவணபவ ப்ரியா அம்பா ஜப வேள்வியை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொதுச் செயலா் ச.ஆறுமுக நயினாா், மாநிலச் செயலா் பா.பரமசிவன், மாநில பொறுப்பாளா்கள் குணதுரை, ராமையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாரதா சமிதி குழுவினா், இந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவினா், கோயில் கிளை கமிட்டி அமைப்பாளா் ஆா்.ராஜகோபால், மாநகா் தலைவா் குணசீலன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.