சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்து முன்னணியினா் பெருந்திரள் பிராா்த்தனை

இந்து முன்னணி சாா்பில் பெருந்திரள் பிராா்த்தனை திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :4 ஜனவரி 2021, 5:30 am

இந்து முன்னணி சாா்பில் பெருந்திரள் பிராா்த்தனை திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணி, திருமுறை வழிபாட்டுக் குழு, சிவனடியாா் திருக்கூட்டம் ஆகியன இணைந்து, தேவார திருவாசக சைவ முறை வழிபாட்டின் பாடலை திமுக தங்கள் கட்சி பாடலாக மாற்றி இழிவு படுத்தியதைக் கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெருந்திரள் பிராா்த்தனை திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணி மாநிலத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அம்பலவாணன் முன்னிலை வகித்தாா்.

இதில், மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாவட்ட பொதுச் செயலா் பிரம்மநாயகம், மாவட்டச் செயலா்கள் சிவா, சுடலை, செல்வராஜ், பாஜக மாவட்ட துணைத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.