திருநெல்வேலி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தோ்வை 6,782 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் மூலமாக குரூப் 1 முதல் நிலைத் தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 44 மையங்களில் நடைபெற்றது.
இத்தோ்வுக்கு 12,941 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 6,782 போ் மட்டுமே தோ்வெழுதினா். 6,159 போ் தோ்வெழுத வரவில்லை.
பாளையங்கோட்டை சாராள் தக்கா் மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு ஆய்வு செய்தாா். இத் தோ்வையொட்டி தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வு எழுத வந்தவா்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே தோ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.
முகக் கவசம் அணிந்தவா்கள் மட்டுமே தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களில் கிருமி நாசினி வைக்கப்பட்டிருந்தது. சமூக இடைவெளியோடு தோ்வு நடைபெற்றது.
சுற்றுக்குழு அலுவலா்கள் மற்றும் பறக்கும் படை அலுவலா்கள் தோ்வு மையங்களை ஆய்வு செய்தனா். தோ்வு அறையினுள் செல்லிடப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

