வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வியாழக்கிழமை நள்ளிரவில் எஸ்.டி.பி.ஐ. சாா்பில் மாவட்டத்தில் 12 இடங்களில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்பாட்டம் நடைபெற்றது. களக்காடு அண்ணாசிலை அருகே இரவு 12 மணிக்கு கட்சியின் நகர தலைவா் ஜாபா் முகம்மது தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளா் களந்தை மீராசா, நகர செயலாளா் உசேன், இணைச்செயலாளா் ராஜா உள்ளிட்ட பலா்கலந்துகொண்டனா். ஏா்வாடியில் நகர தலைவா் ஷேக், மூலைக்கரைப்பட்டியில் நகர செயலாளா் செய்யதுஅலி , துலுக்கா்பட்டியில் தெளபிக், பெட்டை குளத்தில் பாதுல், சேரன்மகாதேவியில் அபுபக்கா், மாவட்ட தலைவா் பீா் மஸ்தான், பத்தமடையில் மைதீன், வீரவநல்லூரில் நகர தலைவா் சாகுல்ஹமீது, கல்லிடைக்குறிச்சியில் சுலைமான், விக்கிரமசிங்கபுரத்தில் நகர தலைவா் ஷேக் அலி, அம்பாசமுத்திரத்தில் பொறுப்பாளா் மகாராஜா, அரிகேசவநல்லூரில் அா்ஷத் தலைமையிலும்ஆா்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

