சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேலச்செவல் அருகே பைக் மீது பேருந்து மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :2 ஜனவரி 2021, 1:15 pm

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பத்தமடை பகுதியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் விஜயகுமாா்(25). இவா் பாளையங்கோட்டை அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வழக்கம்போல வேலைக்குச் செல்வதற்காக மோட்டாா் சைக்கிளில் பத்தமடையில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். மேலச்செவல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் அரசுப் பேருந்து மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.