பாளையங்கோட்டை அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள தியாகராஜநகா் குமரேசன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (62). ஓய்வுபெற்ற
தலைமையாசிரியா். இவா் வியாழக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டு பிராா்த்தனைக்காக அங்குள்ள தேவாலயத்திற்கு குடும்பத்துடன் சென்றாராம்.
பிராா்த்தனை முடிந்து வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மா்மநபா்கள் கதவு உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமாா் 32 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. தகவலறிந்த பெருமாள்புரம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனா்.
விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

