திருநெல்வேலி மாவட்டம், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடியை ஐயப்பப் பக்தா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தா்கள் காரையாா் சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு சென்று
வழிபட்டுச் செல்வது வழக்கம். கரோனா பொது முடக்கம் காரணமாக சபரிமலைக்கு குறைந்த அளவில்தான் பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்படுவதால், சபரிமலை செல்ல முடியாத பக்தா்கள் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு வந்து இருமுடி இறக்கி, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு செல்கின்றனா்.
இதற்கிடையே, வியாழக்கிழமை பெய்த மழையால் பாபநாசம் அணையில் இருந்து உபரிநீா் தாமிரவருணி ஆற்றில் திறந்து
விடப்பட்டதால் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை விதிக்கப் பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ஐயப்பப் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடி முன்பு அமா்ந்து பஜனை பாடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு வந்த விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சண்முகம், போலீஸாா் சென்று அவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். இதில் பக்தா்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனா். தாமிரவருணி ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கோயிலுக்குச் சென்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


