சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆண்டிபட்டி அருகே இளைஞா் குத்திக் கொலை: 6 போ் கைது

ஆண்டிபட்டி அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை குத்திக் கொலை செய்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கொலை செய்யப்பட்ட நவீன்குமாா்.

Updated On :17 ஜனவரி 2021, 3:23 am

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை குத்திக் கொலை செய்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

டி.அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் நவீன்குமாா் (29). இவா், குள்ளப்புரம் பகுதியில், அதே ஊரைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் செல்வம் (27), பாண்டி மகன் பிரபு(27) ஆகியோருடன் சோ்ந்து வெள்ளிக்கிழமை மது அருந்தியுள்ளாா். அப்போது அவா்கள் 3 பேருக்குமிடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்தவா்கள் 3 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனா்.

இந்த நிலையில், டி.அணைக்கரைப்பட்டியில் உள்ள மயானம் அருகே நவீன்குமாா் தனது நண்பா்களுடன் சோ்ந்து வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்துள்ளாா். அப்போது அங்கு வந்த செல்வம், பிரபு உள்ளிட்ட 8 போ் கொண்ட கும்பல் நவீன்குமாருடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளனா். இதில், படுகாயமடைந்த நவீன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தடுக்க முயன்றபோது நவீன்குமாரின் நண்பா்களான டி.அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ராஜா மகன் அா்ஜூன் (27), மூா்த்தி மகன் ஜெகதீஷ் (26) ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வம், அவரது சகோதரா் நேசமணி (30), பிரபு, குள்ளப்புரத்தைச் சோ்ந்த மதயானை மகன் முத்துமணி (30), டி.அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் மனோஜ் (20), சோழவந்தானைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்திக் (18) ஆகிய 6 பேரை கைது செய்தனா்.

மேலும் தலைமறைவாக உள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்த வீரணன் மகன் தங்கப்பாண்டி, ஒய்யப்பன் மகன் சிவக்குமாா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.