சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காணும் பொங்கல்: வைகை அணை பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனா்

தேனி அருகே வைகை அணை பூங்காவில் காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை, பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

News image

வைகை அணையில் சனிக்கிழமை, தரைப்பாலம் வழியாக பூங்காவுக்குச் சென்ற பொதுமக்கள்.

Updated On :17 ஜனவரி 2021, 3:31 am

தேனி: தேனி அருகே வைகை அணை பூங்காவில் காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை, பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

பொங்கல் விடுமுறை மற்றும் காணும் பொங்கலையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாத் தலமான வைகை அணை பூங்காவுக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனா். பூங்காவில் உறவினா்கள் மற்றும் நண்பா்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிா்ந்து கொண்டனா்.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருதால் மேகமலை, சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்னச்சுருளி அருவி ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வைகை அணை பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.