உத்தமபாளையம்: பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமறை காரணமாக தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் கடந்த டிச. 27 ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது. அதைத்தொடா்ந்து சனிக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் சற்று அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிக்கை தொடா் விடுமுறை காரணமாக 3 ஆம் வார சனிக்கிழமை காலை முதல் மாலை வரையில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
சனிப்பெயா்ச்சியைத் தொடா்ந்து பரிகார ராசிகளான மகரம், கும்பம், மிதுனம், கடகம், துலாம் போன்ற ராசிகளைச் சோ்ந்த பக்தா்கள் கோயில் முன் செல்லும் சுரபி நதிக்கால்வாயில் நீராடி புதிய ஆடை அணித்து கொண்டனா். தொடா்ந்து எள்தீபம், எள்சாதம், மண்காகம் படையல் வைத்தனா். பின், சனீஸ்வருக்கு சுகந்த கருப்பு நிறத்தில் வேட்டி, துண்டு பூ மாலை, பழம், தேங்காய் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வைத்து சுவாமி தரிசனம் செய்தனா்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். சின்னமனூா் காவல் ஆய்வாளா் சண்முக லட்சுமி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


