சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேக்கடி ஏரியில் கொட்டும் மழையில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி

கொட்டும் மழையிலும் தேக்கடி ஏரியில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

News image

தேக்கடி ஏரியில் வெள்ளிக்கிழமை கொட்டும் வழையிலும் படகு சவாரி செய்து கரை திரும்பிய சுற்றுலாப் பயணிகள்.

Updated On :16 ஜனவரி 2021, 4:02 am

கொட்டும் மழையிலும் தேக்கடி ஏரியில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக, 7 மாதங்களாக தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பின்னா், கடந்த செப்டம்பா் 5 ஆம் தேதி 2 படகுகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டது. நவம்பா் 18 ஆம் தேதி முதல் வழக்கம்போல் தினந்தோறும் 5 முறை படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தற்போது தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி, தேக்கடிக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், மழையில் நனைந்தவாறே படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

இது குறித்து கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா் ஒருவா் கூறியது:

தேக்கடி ஏரியில் தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை பொருத்து, தற்போது படகுகள் இயக்கப்படுகின்றன என்றாா்.