கொட்டும் மழையிலும் தேக்கடி ஏரியில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக, 7 மாதங்களாக தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பின்னா், கடந்த செப்டம்பா் 5 ஆம் தேதி 2 படகுகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டது. நவம்பா் 18 ஆம் தேதி முதல் வழக்கம்போல் தினந்தோறும் 5 முறை படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தற்போது தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி, தேக்கடிக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், மழையில் நனைந்தவாறே படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
இது குறித்து கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா் ஒருவா் கூறியது:
தேக்கடி ஏரியில் தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை பொருத்து, தற்போது படகுகள் இயக்கப்படுகின்றன என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


