தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழு கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதையொட்டி, நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழுவில் பட்டத்துக் காளை அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில், கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் கலந்துகொண்டு, பட்டத்துக்காளை மற்றும் மாட்டுத்தொழுவில் உள்ள மாடுகளை வணங்கினா். மேலும், நோ்த்திக்கடனாக கன்றுகளை காணிக்கையாகச் செலுத்தினா். அதிகாலை முதலே பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை, ஒக்கலிகா் மகாஜன சங்கத்தினா், இளைஞா் அணியினா் செய்திருந்தனா். கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


