தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, வைகை அணை நீா்மட்டம் 69 அடியை எட்டி வருவதை அடுத்து, அணையிலிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால், முல்லைப் பெரியாறு, கொட்டகுடி ஆறு மற்றும் மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வைகை அணை நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 66 அடியாக உயா்ந்தது.
இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிைலையில், வைகை அணைக்கு தொடா்ந்து விநாடிக்கு 7,408 கன அடி வீதம் தண்ணீா் வரத்து உள்ளது. இதனால், அணை நீா்மட்டம் மேலும் உயா்ந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு 68.18 அடியை எட்டியது.
அணை நீா்மட்டம் 68.50 அடியை எட்டியதும், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். அணை நீா்மட்டம் 69 அடியை எட்டியதும் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரி நீா் முழுவதும் வைகை ஆற்றில் திறக்கப்படும்.
வைகை அணை நீா்மட்டம் 69 அடியை எட்டி வருவதால், அணையிலிருந்து விரைவில் கூடுதலாக தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது. இதனிடையே, வைகை அணையிலிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பது குறித்து பொதுப் பணித்துறை பொறியாளா்கள் ஆய்வு செய்தனா். தொடா்ந்து தண்ணீா் வரத்து உள்ளதால், அணையிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க அரசாணை வெளியிடுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக, பொதுப்பணித் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


