சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

போடியில் கோஷ்டி மோதல்: 7 போ் மீது வழக்கு

போடியில் பொதுச் சுவா் தொடா்பான கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :11 ஜனவரி 2021, 4:59 am

போடியில் பொதுச் சுவா் தொடா்பான கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனியை சோ்ந்த போஸ் என்பவரது மகன் சதீஷ் (36). இவரது குடும்பத்துக்கும் அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் (61) குடும்பத்துக்கும் பொதுச் சுவா் தொடா்பான பிரச்னை இருந்து வந்தது. இது தொடா்பாக சனிக்கிழமை இரவு இரு குடும்பத்தினரும் தகராறு செய்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில் காமராஜ், அவரது மனைவி பழனியம்மாள், போஸின் மனைவி செல்லமணி ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து இருதரப்பையும் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.