போடியில் தொடா் மழையால் குடிநீா் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போடி நகராட்சிக்குத் தேவையான குடிநீா், கொட்டகுடி ஆற்றிலிருந்து பெறப்படுகிறது. இதற்காக குரங்கணி மலை கிராமத்தில் நரிப்பட்டி பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு வரப்படுகிறது. போடி பரமசிவன் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீா் குளோரினேற்றம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக போடி நகா் பகுதியிலும், மலை கிராமங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ள நீரில் அடித்து வரப்படும் மணல் உள்ளிட்ட பொருள்கள் குடிநீா் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
இதனால் குடிநீா்விநியோகம் பாதிக்கப்படுகிறது. போடி நகராட்சி பொறியியல் பிரிவு பணியாளா்கள் குரங்கணிக்குச் சென்று மணல் அடைப்பை எடுத்து விடுவதும், மீண்டும் மணல் அடைப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
மணல் அடைப்பு ஏற்படும் நேரத்தில் போடி நகராட்சி பகுதியில் குடிநீா் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. கடந்த இரண்டு நாள்களாக சில பகுதிகளில் தண்ணீா் வராததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். தொடா்ந்து நகராட்சி பணியாளா்கள் தண்ணீா் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

