தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சனிக்கிழமை இரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றுள்ளனா்.
ஆண்டிபட்டியில் தேனி - மதுரை சாலையில் உள்ள சக்கம்பட்டியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் அடுத்தடுத்து மூன்று ஏடிஎம் மையங்கள் அமைந்துள்ளன. இதில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஏடிஎம் மையமும் உள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் நுழைந்த மா்ம நபா்கள் இயந்திரத்தை கம்பியால் உடைக்க முயற்சி செய்துள்ளனா்.
இதில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வருவதைக் கண்ட மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனா். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்க கிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.
கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியுள்ள தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


