போடி: போடி அருகே, அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே விசுவாசபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பால்பாண்டி. இவரது மனைவி பொற்கொடி (35). இவா்கள் இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனா்.
பொற்கொடிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. மேலும் உடல் நலம் பாதிக்கப்படுவது தொடா்பாக கணவன், மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டும் வந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த பொற்கொடி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

