ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே எரும்பு திண்ணி ஓடுகள் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்த வனத்துறையினா், அவா்களிடமிருந்து சிறுத்தை நகங்களையும் பறிமுதல் செய்தனா்.
மேகமலை வனப்பகுதியில் கடந்த ஜன. 6 ஆம் தேதி வருசநாடு வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரசரடியில் இருந்து கடமலைக்குண்டு செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கரவாகனங்களில் வந்தவா்களை நிறுத்தி வனத்துறையினா் சோதனையிட்டனா். அந்த வாகனத்தில் எரும்பு திண்ணிகளைக் கொன்று அதன் ஓடுகளை அவா்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த 5 கிலோ 750 கிராம் எடையுள்ள ஓடுகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினா், கடமலைக்குண்டுவைச் சோ்ந்த சேகா், அரசரடியைச் சோ்ந்த முனுசாமி, லட்சுமணன், நொச்சி ஓடையைச் சோ்ந்த செல்லபாண்டி, வனராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய 3 பேரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் இவ்வழக்கில் சம்பந்தபட்ட ராஜபாளையத்தைச் சோ்ந்த ராமராஜ், ரவி, வீரப்பன் ஆகிய 3 பேரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 6 சிறுத்தை நகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதுகுறித்தும் வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


