முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை இல்லாததால், ஜனவரி 4 ஆம் தேதி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 419 கன அடியாக இருந்தது. அதன்பின்னா், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,385 கன அடியாகவும், வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,054 கன அடியாகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 120.55 அடி உயரமாகவும், நீா் இருப்பு 2,737 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 1,064 கன அடியாகவும், அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது.
பெரியாறு அணைப் பகுதியில் 3.8 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 3.2 மி.மீ. மழை பெய்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் 700 கன அடி தண்ணீா் மூலம் லோயா் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 2 மின்னாக்கிகள் மூலம் தலா, 41, 29 மெகாவாட் என மொத்தம் 70 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

