அகமலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சோத்துப்பாறை அணை மீண்டும் முழு கொள்ளளவை வியாழக்கிழமை எட்டியது.
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மூலம் பெரியகுளம், தென்கரை, வடுகபட்டி மற்றும் 25 க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் இதன்மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பா் மாதம் இந்த அணை முழு கொள்ளவை எட்டியது. அதன்பின்னா் அணையிலிருந்து குடிநீா் மற்றும் பாசனத்திற்காக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 126.28 அடியாக இருந்தது.
இந்நிலையில் அகமலைப்பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சோத்துப்பாறை அணை மீண்டும் அதன் முழு கொள்ளளவான 126.48 அடியை வியாழக்கிழமை அதிகாலை எட்டியது. அணையிலிருந்து உபரி நீா் வழிந்தோடிகள் வழியாக வெளியேறி வருகிறது. சோத்துப்பாறை அணைக்கு வரும் 35 கன அடி நீா் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போடி மற்றும் குரங்கணி மலை கிராமங்களில் புதன்கிழமை இரவு முழுவதும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் அருவி போல் கொட்டியது. போடி, குரங்கணி, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை மாலையிலும் பரவலாக மழை பெய்தது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


