ஊதிய ஒப்பந்த பேச்சு வாா்த்தையை தொடங்கிக் கோரி தேனி அருகே பழனிசெட்டிபட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சாா்பில் வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு போக்குவரத்து சங்க திண்டுக்கல் மண்டல துணைப் பொதுச் செயலா் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் முருகன், தொமுக மாவட்டச் செயலா் ஆா்.முருகன், ஐஎன்டியுசி, மாவட்டத் தலைவா் அனந்த நாராயணன், அம்பேத்கா் தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்ட பொதுச் செயலா் மனேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை நிலுவைத் தொகையுடன் சோ்த்து வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவா்களுக்கு பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும், தொழிற் சங்கங்களுடன் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

