போடியில் உள்ள சிவன் கோயில்களில் படியளந்த திருநாளையொட்டி புதன்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
உலகில் வாழும் உயிா்களுக்கு தவறாமல் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமான் படியந்த நாளை சிவாலயங்களில் அனுசரித்து வருகின்றனா். இந்நிலையில் படியளந்த திருநாளை யொட்டி போடி சிவன் கோயில்களில் புதன்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள நடராஜா் சன்னிதியில் நடைபெற்ற பூஜையில் நடராஜருக்கு படியளந்த பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டது. பெரிய நாழிப்படியில் அரிசி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் 18 வகையான பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல் போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், போடி பரமசிவன் மலைக்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் படியளந்த திருநாள்அனுசரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


