சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கூடலூா் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தேனி மாவட்டம் கூடலூரில் குடிநீா் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட ராஜீவ்காந்தி நகா் பொதுமக்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 1:05 pm

தேனி மாவட்டம் கூடலூரில் குடிநீா் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

இங்கு லோயா் கேம்பில் இருந்து கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

தற்போது குழாய்களில் அடிக்கடி ‘ஏா் லாக்’ உண்டாவதால் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் கூறியும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து புதன்கிழமை 20 ஆவது வாா்டு ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலா்கள், குழாய் இணைப்பு உடைந்து இருப்பதால் விரைவில் அது சரி செய்யப்பட்டு குடிநீா் விநியோகிக்கப்படும். தற்காலிகமாக வாகனம் மூலம் குடிநீா் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.