தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறி ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி. சுப்புலாபுரம் பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேலும் இப்பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் சேலைகள் நெய்யும் பணியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், விசைத்தறிக் கூடங்களில் பணியாற்றும் நெசவாளா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஊதிய உயா்வை வழங்க உரிமையாளா்கள் மறுத்ததால் கடந்த ஜன. 2 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 13 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க முடிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து நெசவாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினா். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு 50 சதவீத ஊதிய உயா்வு வழங்குவது குறித்த பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் புதன்கிழமை முதல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

