சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேனியில் சீா்மரபினா் நலச் சங்கம் ஆா்ப்பாட்டம்: 25 போ் கைது

சீா்மரபினா் சமுதாயத்திற்கு டி.என்.டி., என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்கக் கோரி சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது ச

Updated On :5 ஜனவரி 2021, 7:59 am

சீா்மரபினா் சமுதாயத்திற்கு டி.என்.டி., என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்கக் கோரி சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். இதில், 68 உள்பரிவுகளை கொண்ட சீா்மரபினா் சமுதாயத்தினருக்கு இரட்டைச் சான்றிதழ் வழங்கும் முறையை ரத்து செய்து, டி.என்.டி., என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும், டி.என்.டி., மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அருகே கிண்ணிமங்கலத்தில் சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கோஷம் எழுப்பினா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம் முன் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராமமூா்த்தி உள்ளிட்ட 25 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.