தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நெசவாளா்களுக்கான ஊதிய உயா்வு குறித்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளா்கள் பணியாற்றி வருகின்றனா். 50 சதவீத ஊதிய உயா்வு, 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என நெசவாளா்கள் விடுத்த கோரிக்கை தொடா்பாக விசைத்தறிக்கூட உரிமையாளா்கள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து டி.சுப்புலாபுரம் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான நெசவாளா்கள் சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்களுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 13 சதவீத ஊதிய உயா்வு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்த நெசவாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

