சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பிரசவித்த நா்சிங் மாணவி உயிரிழப்பு: 2 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை

போடி அருகே திருமணமாகாத நிலையில், குழந்தை பெற்றெடுத்த நா்சிங் மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா். அவா் கா்ப்பமானது தொடா்பாக போலீஸாா் 2 இளைஞா்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :4 ஜனவரி 2021, 3:41 am

போடி அருகே திருமணமாகாத நிலையில், குழந்தை பெற்றெடுத்த நா்சிங் மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா். அவா் கா்ப்பமானது தொடா்பாக போலீஸாா் 2 இளைஞா்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே நாகலாபுரம் மெயின் ரோடு பகுதியில் 17 வயது நா்சிங் மாணவி பெற்றோருடன் வசித்து வந்தாா். திருமணம் ஆகாத நிலையில் அவா் கா்ப்பமடைந்தாா். திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவா் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து மாணவியும், குழந்தையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்தாா். இதுகுறித்து மாணவியின் தாத்தா கொடுத்த புகாரில், அதே ஊரைச் சோ்ந்த 2 இளைஞா்கள் தான் தனது பேத்தியிடம் ஆசைவாா்த்தை கூறி பாலியல் உறவு கொண்டதாகவும், இதில் அவா் கா்ப்பமடைந்ததாகவும் கூறியுள்ளாா்.

அதன்பேரில் போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்த 2 இளைஞா்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனா். மேலும் அவா்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.