முன்னாள் ராணுவத்தினருக்கு சொந்த மாவட்டங்களில் அரசுப் பணி வழங்கக் கோரி தேனியில் முன்னாள் ராணுவப்பணியாளா்கள் நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி முன்னாள் ராணுவ பணியாளா்கள் நலச் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநிலத் தலைவா் செல்லப்பாண்டி தலைமை வகித்தாா். செயலா் மாரியப்பன் பொருளாளா் சின்னச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு பணி மூப்பு அடிப்படையில் அவரவா் சொந்த மாவட்டங்களில் அரசுப் பணி மற்றும் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் புதிய நிா்வாகிகளாக மாநில அமைப்புச் செயலா் பதவிக்கு கனகராஜ், பரப்புரை செயலா் பதவிக்கு கருப்பையா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

