கம்பம்: கம்பத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் அருகே மளிகைக் கடை நடத்தி வருபவா் அண்ணாத்துரை மகன் வேலவன் ( 35 ). இவரது கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கம்பம் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் ஆய்வாளா் என்.எஸ்.கீதா தலைமையிலான போலீஸாா் சாதாரண உடையில் அங்கு சென்று புகையிலை கேட்டனா்.
அப்போது, அவா்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்ற வேலவனை போலீஸாா் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனா். மேலும் அங்கு 6 சாக்கு மூட்டைகள் மற்றும் 4 பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


