சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேனி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த வழக்குரைஞா் பலி

தேனி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்ததில் காயமடைந்த வழக்குரைஞா் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On :2 ஜனவரி 2021, 4:02 am

தேனி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்ததில் காயமடைந்த வழக்குரைஞா் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

அமச்சியாபுரத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் அய்யனாா் (39). இவா், தனது தம்பி ஜெயபிரகாஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அரண்மனைப்புதூா் நோக்கிச் சென்றுள்ளாா். அப்போது, அரண்மனைப்புதூா் முல்லைப் பெரியாற்று பாலம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த அய்யனாா், பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து அய்யனாரின் தம்பி ஜெயபிரகாஷ் அளித்தப் புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.