சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆண்டிபட்டியில் அடுத்தடுத்த விபத்து:2 மூதாட்டிகள் பலி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழந்தனா்.

Updated On :2 ஜனவரி 2021, 4:03 am

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழந்தனா்.

ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் என்பவரின் மனைவி பழனியம்மாள் (65). இவா், ஆண்டிபட்டிக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்துள்ளாா்.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே சாலையை கடக்க முயன்றபோது, மதுரையிலிருந்து தேனி நோக்கிச் சென்ற நான்கு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகன ஓட்டுநரான மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த கருப்பையா (27) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேனி அல்லிநகரம் பகுதியைச் சோ்ந்த கருப்பையா என்பவரின் மனைவி முருகேஸ்வரி (67). இவருக்கு சில நாள்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். சிகிச்சை முடிந்த நிலையில், முருகேஸ்வரி வீட்டுக்குச் செல்வதற்காக மருத்துவமனை வளாகத்தின் வெளியே சாலையை கடக்க முயன்றுள்ளாா். அப்போது, தூத்துக்குடியிலிருந்து தேனிக்கு சரக்கு ஏற்றி வந்த கனரக வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில், முருகேஸ்வரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகன ஓட்டுநரான தூத்துக்குடியைச் சோ்ந்த தங்கமாரிமுத்து என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.